பிரபஞ்சவிதிகள் பகுதி 1

அனைவருக்கும் வணக்கம்,  நம்முடைய முந்தைய பதிவுல ஈர்ப்பு விதியை பற்றி பார்த்தோம். அந்த பதிவுல சொன்ன மாதிரி பிரபஞ்சவிதிகள் பற்றி தான் விளக்கமா பார்க்க உள்ளோம்.இந்த பதிவுல தெய்வீக ஒருமைவிதியை பற்றி பார்ப்போம்.

தெய்வீக ஒருமைவிதி– Law of Divine Oneness – நம்முடைய உணர்வுக்கு அப்பாற்பட்டு , எண்ணங்கள் , செயல்கள் மற்றும் நம்மை சுற்sறி நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையது. நாம் அனைவரும் படைப்பின் மூலத்துடன் இணைக்கப்பட்டு உள்ளோம். இதை தன இந்த விதி அடிப்படையாக கூறுகிறது.

(“Beyond our sense, Every thought, action & event is in someway connected to anything and every thing else”)

நாம் அனைவரும் ஒன்றே ” – அதாவது நம்முடைய வெளிப்புற தோற்றம், சமூக சூழ்நிலை இவை எல்லாம் தாண்டி , ஆன்மா (உயிர்) அடிப்படையில பார்த்த நாம் அனைவரும் ஒன்று தான்.

நம்ம எல்லாரும் பெருவெடிப்பு கோட்பாடு (Bing bang Theory) பற்றி கேள்விப்பட்டு இருக்கோம். இந்த பிரபஞ்சம் தோற்றியதை பற்றின கோட்பாடுதான் பெருவெடிப்பு கோட்பாடு. இந்த கோட்பாடு 20ம் நுற்றாண்டுல தான் சொல்லப்பட்டது. இதற்கு “ஐன்ஸ்டின்” பொதுசார்புக்கோட்பாடு (General Theory of Realativity) மற்றும் அண்டவியற்கோட்பாடு (Cosmological Principle) தான் அடிப்படையாக அமைந்தது.

இந்த பெருவெடிப்பு நிகழ்ந்த பிறகு தான், முதலில் காலமும்(Time) வெளியும் (Space) தோன்றியது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ஈர்ப்பு விசை, அணு துகள்கள் , புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் மற்றும் சில தனிமங்கள் உருவாகியது. அதிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு பின் வீண்மீன் மற்றும் வீண்மீன் கூட்டங்களும் உருவாகியது. இதற்கு எல்லாம் பிறகு தான் இப்போது நாம் இருக்கிற இந்த சூரியகுடும்பம் தோன்றியதுனு சொல்லுறாங்க.

சரி, இந்த பெருவெடிப்பு எதனால்நிகழ்ந்தது ? இந்த கேள்விக்கு இன்னும் தீர்க்கமான விடை இல்லை.

இந்த பெருவெடிப்பு துவக்கத்துல ஒரு சிறு புள்ளியா தான் இருந்தது. அதற்கு பிறகு தான் அது விரிவடைந்து கொண்டே இருக்கு. அப்போ, அந்த ஒரு சிறு புள்ளில இருந்து தான் இவ்வளவு பெரிய பிரபஞ்சமே உருவாக்கிருக்கு. இதன்படி, பார்த்த நம்முடைய அனைவரின் தோற்றமும் ஒரே மூலத்துல இருந்துதான் வந்துருக்கு. மனிதர்கள் மட்டும் இல்லாமல் இங்கு இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களும் , தொலைவில் உள்ள வீண்மீன்கள் கூட ஒரே மூலத்தில் இருந்து தோற்றியவைதான். இதைத்தான் “படைப்பின் மூலம் அனைவரும் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளோம்” இந்த விதியில சொல்லுறாங்க.

சரி இவங்க 20ம் நுற்றாண்டுல சொன்னதை, ஒருசிலர் அதற்கு முன்பே சொல்லிருக்கிறார்கள்.  அவர்களே சித்தர் பெருமக்கள். எடுத்துக்காட்டாய் , குதம்பை சித்தர் பாடல்களை பார்ப்போம்.

“அண்டத்தை தேவன் அழிக்க எண்ணும் போதே அண்டம் உண்டாக்கிற்றடி குதம்பாய்”

இன்றளவும் நம்முடைய பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டேப்போகிறது. நம்முடைய பிரபஞ்சத்தை ஒரு பலூன் போல கற்பனை செய்து கொண்டால், அது ஒரு அளவுக்கு மேல் விரிவடையும் போது வெடிப்பு நிகழும். அதுபோல தன தான் இதற்கு முன்பு இருந்த விஷயம் விவடைந்து வெடித்து இப்பொது உள்ள பிரபஞ்சம் உருவாகியுள்ளது.

“அண்டத்துக்கப்பால் அகன்ற சுடரினை பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய்”

– இதன் மூலம் இந்த அண்டமே ஒரு சிறு பகுதி தான், இதையும் தாண்டி இந்த வெளியில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றையும், இந்த பிண்டமாகிய சிறு உடலிலும் அதை பார்க்கலாம் என்கிறார்.

” ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை நின்றிட செய்தானடி குதம்பாய் “

– இவ்வரிகள் வாயிலாக இந்த பிரபஞ்சத்தையே பிடித்து நிறுத்தி உள்ள ஆற்றலை (Dark Energy) பற்றி குறிப்பிடுகிறார்.

“அணுவாய் பல்அண்டமாய் ஆனா சிற்ஜோதியை துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய் “

இங்கே உள்ள மிக சிறு அணு முதல் பரந்து விரிந்த அண்டம் வரை எல்லாமே ஒரே மூலத்தின் வெளிப்பாடே.

நம்முடைய சித்தர் பெருமக்கள் எல்லா விஷயங்களையும் எப்பவோ சொல்லிவிட்டார்கள். இப்போ இருக்குற மாதிரி கவர்ச்சியா விதிகளா பிரிச்சு சொல்லால, ஏனென்றால் அவங்க எதையுமே பிரிச்சு பார்க்கல. அவங்க எல்லாத்தையுமே சிவம் அப்படிங்கிற மூலமா தான் பார்த்தாங்க. அதனாலே எல்லா சித்தர்களும் சிவத்தை பற்றி பாடிருக்காங்க. இவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி இருந்தும், நம்மலால கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை அப்பவே அவங்க எப்படி சொன்னாங்க. அதுதான் பெரும் ரகசியமே இருக்கு?

இதற்கு பின் வந்தவங்க கூட, எல்லாமே அன்பு தான் , படைப்பே அன்பு தானும் சொன்னாங்க. இன்னும் ஒரு சிலர் அவங்க கொண்ட பக்தியால அவங்க விரும்பிய தெய்வங்கள் தான் இங்கு நிறைந்து இருக்குனு சொன்னாங்க.எடுத்த்துக்காட்ட, கந்தகுரு கவசத்துல, ” உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்”  பாடிருப்பார். அதாவது தான் வணங்கும் முருகன் தனக்கு உள்ளேயும் வெளியேயும் நிறைந்து இருக்கார்னு சொல்லுகிறார். சிவமோ, முருகனோ, அன்போ இல்லை இயற்கையோ எதுவா வேணும்னாலும் நாம் எடுத்துக்கலாம் ஆனா எல்லாருமே, எல்லாமே ஒன்னு தான்.

நன்றி!…

இந்த பதிவை காணொளியாக பார்க்க எங்களுடைய YouTube Channel Link கீழே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

English